TNPSC exam date was announced by the government

"தமிழ்நாடு அரசு வேலைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் துணை ஆட்சியர், காவல் துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.இந்த நிலையில், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"